பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை கடலில் மீன் கிடைக்காததால் வெளிமாநிலங்களுக்கு கடந்த 20 நாட்களாக மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, வேலிங்கராயன்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்துவாரம் வழியாக படகில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்திற்குப் பிறகு பரங்கிப்பேட்டை கடலில் அதிக அளவில் மீன் கிடைத்து வந்தது.இதனால் அன்னங்கோயில் பகுதியில் இருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தினமும் 100 டன் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.இந்த ஆண்டு குறைந்த அளவே மீன் கிடைப்பதால் கடந்த 20 நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீன் வியாபாரிகள், மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு சிலர் சுறுக்கு வலையை பயன்படுத்தி சிறிய மீன்களை பிடிப்பதால் மீன் பெருக்கம் இல்லாமல் போய் விட்டது. சுறுக்கு வலை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று மீனவர்கள் கூறினர்.
July 20, 2011
பரங்கிப்பேட்டை : மீன்கள் கிடைக்காததால் ஏற்றுமதி திடீர் நிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- உலகின் உயரமான இளம்பெண்
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
No comments:
Post a Comment