காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால் பேட்டை - மானியம் ஆடூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அருகே லால் பேட்டை - மானியம் ஆடூர் கிராமத்திற்கு செல் லும் 3 கி.மீ., தூர சாலை உள்ளது. மானியம் ஆடூர் கிராம மக்கள் லால் பேட்டை, சிதம்பரம், குமராட்சி பகுதிகளுக்கு செல்ல இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையைத் தவிர்த்து,
வீராணம் ஏரிக் கரை வழியாக லால் பேட்டைக்கு வந்தால் தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால் கால விரயம் ஆவது மட்டுமல்லாது, 5 கி. மீ., சுற்றிச் செல்ல வேண்டும்.மானியம் ஆடூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் லால்பேட்டை அரசு பள்ளிக்கு வருவதற்கும், வியாபாரிகள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின் றனர். ஆனால் மொத்த சாலையும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி பள்ளம் இருக்கும் இடம் தெரியாததால் சைக்கிளில் பள் ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அடிக்கடி விபத்துக் குள்ளாகி வருகின்றனர். கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
September 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
No comments:
Post a Comment