காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால் பேட்டை - மானியம் ஆடூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அருகே லால் பேட்டை - மானியம் ஆடூர் கிராமத்திற்கு செல் லும் 3 கி.மீ., தூர சாலை உள்ளது. மானியம் ஆடூர் கிராம மக்கள் லால் பேட்டை, சிதம்பரம், குமராட்சி பகுதிகளுக்கு செல்ல இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையைத் தவிர்த்து,
வீராணம் ஏரிக் கரை வழியாக லால் பேட்டைக்கு வந்தால் தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால் கால விரயம் ஆவது மட்டுமல்லாது, 5 கி. மீ., சுற்றிச் செல்ல வேண்டும்.மானியம் ஆடூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் லால்பேட்டை அரசு பள்ளிக்கு வருவதற்கும், வியாபாரிகள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின் றனர். ஆனால் மொத்த சாலையும் குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி பள்ளம் இருக்கும் இடம் தெரியாததால் சைக்கிளில் பள் ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அடிக்கடி விபத்துக் குள்ளாகி வருகின்றனர். கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
September 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- எம்.எல்.ஏ.செல்வி ராமஜெயத்திற்கு மீண்டும் சீட் கிடைக்கும்.
- சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
No comments:
Post a Comment