சென்னை : நீலாங்கரையில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஸ்வேதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனுக்கு ஒருநாள் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் ஏதேதோ பெயர்களை கூறி நான் உங்களுக்கு அறிமுகமானவன் என்று கூறியுள்ளார். உங்களை யார் என்று தெரியவில்லை என்று ஸ்வேதா கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் விடவில்லை. அவ்வப்போது ஸ்வேதாவின் செல்போனுக்கு பேசி உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக உள்ளது. எனவே ரொம்ப அழகாத்தான் இருப்பீர்கள் என்று ஆபாசமாக பேசியுள்ளான்.
அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஸ்வேதா துண்டித்த போது, ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்ப தொடங்கியுள்ளார். பின்னர் தன்னுடைய விருப்பத்துக்கு இணங்கும்படி ஸ்வேதாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்த ஸ்வேதா தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனை படி, அந்த நபரை பெசன்ட் நகர் பீச்சுக்கு வர செய்தனர். அந்த வாலிபரை ஸ்வேதாவின் உறவினர்கள் பிடித்தனர். அந்த நபர் கொரட்டூரில் டீக்கடை நடத்தி வரும் உலகநாதன் (27) என்பது தெரியவந்தது. அபிராமபுரம் காவல் நிலையத்தில் அவனை ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ரவி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார். உலகநாதனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!

No comments:
Post a Comment