Islamic Widget

September 12, 2010

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?

பரங்கிப்பேட்டை: வரலாற்றுச் சிறப்பும் பாரம்பரிய பெருமையும் நிறைந்த கடற்கரைபட்டினமான பரங்கிப்பேட்டைக்கு அதன் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்பது பலதரப்பு மக்களின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது. கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும் இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்ததில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனை பரங்கிப்பேட்டை 6-வது வார்டு கவுன்சிலர் சந்தித்து மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றி முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நன்றி mypno

No comments:

Post a Comment