August 11, 2010
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பராமரிப்பையொட்டி வெள்ளை அடிக்கும் பணி நடந்தது.சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 650 மீ., நீள பாலம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இப்பாலம் கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டால் பல இடங்களில் தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், சாலை பகுதி பெயர்ந்தும் காணப் பட்டது.அதையொட்டி கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. பாலத் திற்கு வெள்ளை அடித்துவிட்டால் மட்டும் போதாது, உறுதி தன்மையையும் சோதித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
- மய்யத் செய்தி
- பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு
- ஜமாஅத் தேர்தலில் திடீர் திருப்பம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!
- இறப்புச் செய்தி
- இடமில்லாமல் வந் (தேறி) தவர்களுக்கு இட ஒதுக்கீடு பேச்சு?
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை
- “மனித குண்டாக வருவேன்” போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்
- ரிசானாவின் ஜனாசா சவுதியில் அடக்கம்
No comments:
Post a Comment