August 11, 2010
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பராமரிப்பையொட்டி வெள்ளை அடிக்கும் பணி நடந்தது.சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 650 மீ., நீள பாலம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இப்பாலம் கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டால் பல இடங்களில் தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், சாலை பகுதி பெயர்ந்தும் காணப் பட்டது.அதையொட்டி கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. பாலத் திற்கு வெள்ளை அடித்துவிட்டால் மட்டும் போதாது, உறுதி தன்மையையும் சோதித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
No comments:
Post a Comment