Islamic Widget

August 11, 2010

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் வாலிபர் சாவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மர்மமான முறையில் சமையல் கொட்டகை தீ பிடித்து மாற்றுத் திறனாளி வாலிபர் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பானு. இவரது மகன் அருள் (23). மாற்றுத் திறனாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டு எதிரே உள்ள கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மர்மமான முறையில் கொட்டகை எரிந்ததில் அருள் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அருள் நேற்று இறந்தார்.இதுகுறித்து பானு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment