பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மக்களின் கனவுப் பாலமான பரங்கிப்பேட்டை-கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்றுப் பாலம் நாளை திறக்கப்படவுள்ளது.
வெள்ளாற்றுப் பாலம் திறப்பு விழாவில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.கிள்ளையில் இருந்து பரங்கிப் பேட்டையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே 20 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை துறைசார்பில் புதிய பாலம் கட்டப்பட்டது.
இதற்கான திறப்பு விழா பரங்கிப்பேட்டையில் நாளை நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமை தாங்குகிறார். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்கிறார். புதிய பாலத்தை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்.விழாவில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், சென்னை நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமைப் பொறியாளர் சண்முகநாதன், சேர்மன்கள் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன், பங்கேற்கிறார்கள்.
September 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- தொண்டு நிறுவன "ஷெட்' விற்றதை தடுத்ததால் முற்றுகை
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- டெல்டா மாவட்டங்களில் கனமழை
- ராமர் கோவில் அருகே மசூதி கட்டவிடமாட்டோம் - சுப்ரமணிய சுவாமி
- பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.54 உயர்வு!
No comments:
Post a Comment