பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மக்களின் கனவுப் பாலமான பரங்கிப்பேட்டை-கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்றுப் பாலம் நாளை திறக்கப்படவுள்ளது.
வெள்ளாற்றுப் பாலம் திறப்பு விழாவில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.கிள்ளையில் இருந்து பரங்கிப் பேட்டையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே 20 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை துறைசார்பில் புதிய பாலம் கட்டப்பட்டது.
இதற்கான திறப்பு விழா பரங்கிப்பேட்டையில் நாளை நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமை தாங்குகிறார். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்கிறார். புதிய பாலத்தை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்.விழாவில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், சென்னை நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமைப் பொறியாளர் சண்முகநாதன், சேர்மன்கள் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன், பங்கேற்கிறார்கள்.
September 13, 2010
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம் நாளை திறப்பு: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
No comments:
Post a Comment