பரங்கிப்பேட்டை : இடப்பிரச்னையில் மூன்று பேரை கட்டையால் தாக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமாருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ராஜேந்திரனை, ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஹேமாவதி இருவரும் கட்டையால் தாக்கினர். அதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் சகோதரர் சத்தியானந்தம், அவரது மனைவி பாக்கியலட்சுமியையும் தாக்கினர். இதுகுறித்த ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து ஜெயக்குமார் (40), ஹேமாவதி (35) இரண்டு பேரையும் கைது செய்தார்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment