பரங்கிப்பேட்டை : இடப்பிரச்னையில் மூன்று பேரை கட்டையால் தாக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமாருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ராஜேந்திரனை, ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஹேமாவதி இருவரும் கட்டையால் தாக்கினர். அதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் சகோதரர் சத்தியானந்தம், அவரது மனைவி பாக்கியலட்சுமியையும் தாக்கினர். இதுகுறித்த ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து ஜெயக்குமார் (40), ஹேமாவதி (35) இரண்டு பேரையும் கைது செய்தார்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment