வாஷிங்டன்: உலக அரங்கில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் இந்தியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலோன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலோன் இதை தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில், இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருவது, அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில், இதை நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடனான நட்பை, மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவுடன் மட்டுமல்லாமல் தென் கொரியா, சீனா போன்ற நாடுகளுடனும் உறவை பலப்படுத்த வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது.கடந்த 2010 நவம்பர் மாதம் அதிபர் ஒபாமா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுடனான உறவை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஒரு பகுதி தான் இது. இவ்வாறு டாம் டொனிலோன் கூறினார்.
source: inneram
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
No comments:
Post a Comment