வாஷிங்டன்: உலக அரங்கில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் இந்தியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலோன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலோன் இதை தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில், இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருவது, அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில், இதை நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடனான நட்பை, மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவுடன் மட்டுமல்லாமல் தென் கொரியா, சீனா போன்ற நாடுகளுடனும் உறவை பலப்படுத்த வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது.கடந்த 2010 நவம்பர் மாதம் அதிபர் ஒபாமா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுடனான உறவை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஒரு பகுதி தான் இது. இவ்வாறு டாம் டொனிலோன் கூறினார்.
source: inneram
January 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment