முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட விருப்பதாகத் தெரிகிறது.
சவூதி மன்னரின் அரசவைச் செய்தியின் பிரகாரம் டிசம்பர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மன்னருக்கு மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும், முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள கோளாறினை நிவர்த்திக்கும் வகையில் ஏற்கெனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக இது அமையும் என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், சவூதியிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டிருந்த இரத்த அடைப்பினை நீக்குமுகமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் மன்னர் அப்துல்லாஹ் நியூயார்க் சென்றிருந்தார். குறித்த அறுவை சிகிச்சையின் பின்னர் மன்னரின் உடல்நிலை பெரிதும் தேறியுள்ளதாக சவூதி சுகாதார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வகைப் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ள 80 வயதான மன்னர் அப்துல்லாஹ் மருத்துவ சிகிச்சை பெறுமுகமாக கடந்த இரண்டு வருட காலத்தில் அதிக நாட்களை வெளிநாட்டிலேயே கழித்து வருகிறார். இந்நிலையில், அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான சுல்தான் பின் அப்துல் அஸீஸ் நாட்டைப் பரிபாலித்து வருகின்றார்.
Source:.inneram
December 04, 2010
சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
No comments:
Post a Comment