கடந்த வியாழக்கிழமை (02.12.2010) இந்திய இராணுவம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் புதிய சூப்பர்சொனிக் ஏவுகணைச் சோதனையொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.
290 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணைக்கு 'ப்ரஹ்மோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'கடற்படைப் படகுகள் உள்ளிட்ட கிட்டிய இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது' என இராணுவப் பணிப்பாளர் எஸ்.பி. தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணை இதற்கு முன்னரும் பலமுறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரஹ்மபுத்திரா நதியின் பெயரோடு ரஷ்யாவின் மொஸ்க்வா நதியின் பெயரையும் இணைத்து பிரஹமோஸ் என இந்த ஏவுகணைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் உள்ள அணுவாயுத சக்தி குறித்த சர்ச்சைகளும் ஏவுகணைப் பரிசோதனைகளும் இடையிடையே ஏற்படுவதுண்டு. இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்கெனவே மூன்று போர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த இரண்டு நாடுகளுமே அணுவாயுத மறுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்புத் தெரிவித்து வருகின்றமை நினைவுகூரத்தக்கது.
Source:.inneram
December 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment