Islamic Widget

December 04, 2010

கடலூரில் 6ம் தேதி பஸ்கள் ஓடாது'

கடலூர் : லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது என மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தேசிங்ராஜன் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன கவுன்சில் கூட்டம் தீர்மானத்தின் படி லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கடந்த 10 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது. டீசல் விலை உயர்வை கண்டிப்பது. மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள பாலங்களில் டோல் கேட் கட்டணம் அதிகப்படியாக வசூல் செய்வதை குறைக்கக் கோரியும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (6ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது.
 
 
Source:dinamalar photos: pno.news

No comments:

Post a Comment