November 26, 2010
தொலைபேசி எண் நீடிக்க புது வசதி
வேகமாக வளரும் இந்திய தொலை தொடர்புத்துறை
இந்தியாவில், மொபைல் தொலைபேசி உபயோகிப்பாளர்கள், இனிமேல் தங்களது மொபைல் எண்ணை மாற்றாமலேயே, சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக்கில் இந்த சேவையை, தொலைத் தொடர்புத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கபில் சிபல் இன்று துவக்கி வைத்தார்.
இந்தியா முழுவதும், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி முதல் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வசதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டாலும், சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்குத் தயாராகாதது உள்பட பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வந்தது. தற்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு தனது சேவையை மாற்றிக் கொள்ள விரும்பும் உபயோகிப்பாளர், புதிய நிறுவனத்துக்குச் சென்று உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, 19 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அது புதிய நிறுவனத்துக்கு மாறிவிடும். ஆனால், உபயோகிப்பாளர் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது ஒரே நிறுவனத்திடம் சந்தாதாரராக இருக்க வேண்டும்.
எம்என்பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சேவையைப் பெற விரும்பும் உபயோகிப்பாளர்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்த தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கட்டணப் பாக்கி எதையும் வைத்திருக்கக் கூடாது.
போஸ்ட் பெய்ட் எனப்படும் மாதாந்திர பில் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள், ப்ரீ பெய்டு எனப்படும் முன்னதாகவே பணம் செலுத்தி மொபைல் தொலைபேசி பயன்படுத்துவோர் ஆகிய அனைவருமே இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு சேவையை மாற்றுவதற்கு, ஏழு நாட்கள் பிடிக்கும்.
இந்தப் புதிய சேவையால், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே போட்டி அதிகரிக்கும் என்றும், அதனால், உபயோகிப்பாளர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 700 மில்லியன் மொபைல் தொலைபேசி சந்தாதாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:bbctamil
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment