மங்களூரில் விபத்துக்குள்ளான விமானம்
தென் இந்தியாவின் மங்களூருவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட ஒரு விமான விபத்துக்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியின் மீதே தவறு உள்ளது என்று அது குறித்து நடத்தப்பட்ட அதிகாரபூர்வமான விசாரணையில் முடிவு செய்துள்ளது.
அந்த விபத்தில் அதிலிருந்த கிட்டத்தட்ட 160 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கை ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டது. அதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான ஓட்டியான ஸ்லாட்கோ க்ளூஸியா அந்த விமான பயணத்தின் பெரும்பாலான நேரத்தில் தூங்கினார் என்றும், அதன் காரணமாக விமானம் தரையிரங்கும் நேரத்தில் அவர் உடல் ஒருங்கிணைந்த நிலையில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த விமானம் மங்களூரு விமான நிலையில்த்தில் இறங்க ஓடு பாதையை அணுகிய போது சரியான் கோணத்தில் அணுகவில்லை என்றும், விமானத்தை அப்போது தரையிறக்காமல் மீண்டும் மேலேறி பிறகு தரையிறங்க முயற்சி செய்யுமாறு உடனிருந்த துணை விமான ஓட்டுனரின் எச்சரிக்கையை நிராகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான ஓட்டியின் நடவடிக்கை காரணமாக அந்த போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையை கடந்து ஒரு மலையிடுக்கில் விழுந்ததால் வெடித்து தீப்பிடித்தது.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மோசமான இந்த விமான விபத்தில் எட்டு பேர் உயிர் தப்பினர்.
Source:bbctamil
November 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment