Islamic Widget

November 26, 2010

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர் : கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை  காரணமாக, தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் நேற்று கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.  தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும்  விடுமுறை விடப்பட்டுள்ளது.

Source:dinamalar

No comments:

Post a Comment