இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக ஏற்பட்டுள்ளன. சுமத்ரா தீவுக்கு சமீபமாக நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், இதற்கு அன்மையிலுள்ள மென்டாவி தீவுப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
இந்தச் சுனாமித் தாக்கததினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 40க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. நேற்றிரவு கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில், 7.7 புள்ளித் தாக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு, அருகிருந்த கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்துள்ளது. பல வீடுகள் தரை மட்டமாகியுள்ளன. நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டதும் பல மக்கள் முன் கூட்டியே அங்கிருந்து வெளியேறிவிட்டதால், அங்கு பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க மத்திய ஜாவா நகருக்குச் சமீபமாக, மேர்வி மலை புகை கக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்புக் கருதி அப் பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
நேற்று முன் தினம் கடும் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால், ஜகர்த்தா நகரின் முக்கிய தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இதன் காரணமாகப் போக்குவரத்துக்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அறியப்படுகிறது.
Source:tamilmedia
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!



No comments:
Post a Comment