இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஒன்றாக ஏற்பட்டுள்ளன. சுமத்ரா தீவுக்கு சமீபமாக நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், இதற்கு அன்மையிலுள்ள மென்டாவி தீவுப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
இந்தச் சுனாமித் தாக்கததினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 40க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. நேற்றிரவு கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில், 7.7 புள்ளித் தாக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு, அருகிருந்த கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்துள்ளது. பல வீடுகள் தரை மட்டமாகியுள்ளன. நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டதும் பல மக்கள் முன் கூட்டியே அங்கிருந்து வெளியேறிவிட்டதால், அங்கு பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க மத்திய ஜாவா நகருக்குச் சமீபமாக, மேர்வி மலை புகை கக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்புக் கருதி அப் பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.
நேற்று முன் தினம் கடும் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால், ஜகர்த்தா நகரின் முக்கிய தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இதன் காரணமாகப் போக்குவரத்துக்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அறியப்படுகிறது.
Source:tamilmedia
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை



No comments:
Post a Comment