இந்தோனிஷியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமியினால் கடலோர கிராமங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
திங்கள் கிழமை இரவு ஏற்பட்ட நில நடுக்கம் 7.7 ரிக்டர் அளவுக்கு இருந்தது.
இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
10 அடி உயரமாக வந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகளை அடித்துச் சென்றுள்ளது. இந்தோனிஷியாவில் உள்ள மெண்டாவி தீவு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனிஷியா பசிபிக் கடலில் எரிமலைகள் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
2004 ஆம் ஆண்டு இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 230000 பேர் இறந்துள்ளனர்.
Source: inneram.com
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
No comments:
Post a Comment