Islamic Widget

June 12, 2011

பரங்கிப்பேட்டை அருகே தகராறு

தந்தை,மகன் மீது தாக்குதல், கார் கண்ணாடி உடைப்பு 6பேர் கைது

பரங்கிப்பேட்டை அருகே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்த 6பேரை போலீசார் கைது செய்தனா் மேலும் 2பேரை தேடி வருகின்றனா்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்திற்கு பரங்கிப்பேட்டையை சேர்ந்த சேகர் மனைவி செல்வி (வயது 37).அவரது மகன் ரகு (24) ஆகிய 2 பேரும் சின்னூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் குட்டியாண்டவர் கோவில் அருகே சென்ற போது பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த சத்தியராஜ் ,வினோத் குமார், முரளி உள்பட 8 பேர் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.இதை அந்த வழியாக சென்ற செல்வி தட்டிக்கேட்டார்.இதில் ஆத்திரமடைந்த சத்தியராஜ் மற்றும் சிலர் அவரிடம் வாக்கு வாதம் செய்தனர்.இதை செல்வி மகன் ரகு தட்டிக்கேட்டார்.அவரை சத்தியராஜ், வினோத்குமார், செந்தில்குமார், சரவணன், முரளி , மகேஷ், சுந்தர்ராஜ், சதீஷ் ஆகிய 8 பேரும் தாக்கினர்.சம்பவம் கேள்விபட்டு வந்த ரகுவின் தந்தை சேகரையும் அவர்கள் தாக்கினர்..இந்த தாக்குதலின் போது சலங்குகார தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான காரை டிரைவர் நடராஜன் அங்கு நிறுத்தினார். இதை பார்த்த சத்தியராஜ் உள்பட 8 பேரும் சேர்ந்து கார் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர்.இதற்கிடையில் இந்த தாக்குதலில் காயமடைந்த ரகு,சேகர் ஆகிய 2 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது பற்றி கார் டிரைவர் நடராஜன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சீனு வாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சத்தியராஜ், செந்தில்குமார், முரளி, மகேஷ், சுந்தர்ராஜ், சதீஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வினோத்குமார், சரவணன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment