11 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் ஓட்டல்கள் 31 ஆம் தேதி இரவு 1.30 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உரிமையாளர்களுடன் சென்னை மாநகர போலீஸ் ஆனையர் ராஜேந்திரன் நடத்திய சிறப்புக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசும்போது,பாதுகாப்பாக புத்தாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நட்சத்திர ஓட்டல் பிரதிநிதிகளோடு இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.புத்தாண்டு நிகழ்ச்சிகளை 31ந் தேதி இரவு 1.30 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நீச்சல் குளங்களை கண்டிப்பாக மூடிவிட வேண்டும். சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அந்தந்த பகுதி துணை போலீஸ் கமிஷனர்களிடம் முன்அனுமதி பெற வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல் வளாகங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இளம்பெண்களுக்கு எதிராக ஈவ்டீசிங் பிரச்சனைகளின்போது ஓட்டல் உரிமையாளர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் உடனடியாக போலீசிடம் புகார் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பெண்களுக்குரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாடவும் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலை தடுப்புகள் அமைக்கப்படும். கண்டிப்பாக பைக் ரேஸ் கூடாது. குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது.31 ஆம் தேதி மாலை முதல் சென்னை நகரில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்படும். 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாசநடனங்களை நடத்தக் கூடாது என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment