கடலூரை அடுத்த ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், கீழ்குமார மங்கலம், மேலழிஞ்சி ப்பட்டு, நல்லாத்தூர் ஆகிய பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருந்து வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ. அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் உடனடியாக சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு பாரத நிர்மண் சாலை திட்டத்தின் கீழ் ரூ.82 லட்சம் செலவில் நேற்று சாலை சீரமைக்கும் பணி மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. முன்னதாக பூமி பூஜை நடைபெற்றது. இதன்பின் இப்பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கடலூர் ஒன்றிய செயலாளர் கோ.ஜெயபால், தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜ், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் நடனசபாபதி, ஊராட்சி மன்ற தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதி ஜெயச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், ஒன்றிய இளைஞரணி ஜெயமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன், ஒப்பந்தததாரர் வெங்கடேசன், பிரகாஷ், விஜயன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
September 18, 2010
கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- கத்தார் நாட்டில் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து: 13 குழந்தைகள் உடல் கருகி பலி
No comments:
Post a Comment