Islamic Widget

September 05, 2010

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

கடலூர் : கடலூர் மாவட்டத் தில் 11 பேர் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத் தில் பரங்கிப்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல், நெய்வேலி வட்டம் 20 ல் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலவடிவேல், நெய்வேலி வட்டம் 9 ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், கம்மாபுரம் ஒன்றியம் வடக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, சிதம்பரம் வரவரமுனி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், மங்களூர் ஒன்றியம் ஆ.பாளையம் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்,

நெய்வேலி வட்டம் 11ல் உள்ள என்.எல்.சி., மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மங்கையர்கரசி, பண்ருட்டி பூங்குணம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கசாமி, நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ், நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வீரப்பன், கடலூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ரவி ஆகிய 11 பேர் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை 5ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment