Islamic Widget

December 29, 2010

குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மறுவிசாரணை

கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் குற்றவாளியுடன் இந்தரேஷ் குமாருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுவதால் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
முதற்கட்ட விசாரணையின்போது இந்திரேஷ் குமாரின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு சிபிஐ கோரியதைத் தொடர்ந்து அதன் நகல்களை இந்திரேஷ் குமார் அளித்திருந்தார்.
இந்நிலையில் சிபிஐ கேட்டுள்ள பிறஆவணங்களை அளித்த பின்னர் அவர் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Source:.inneram

No comments:

Post a Comment