Islamic Widget

December 29, 2010

சிலைக்காக 8 பேருந்துகளை சேதப்படுத்திய சிவசேனா-பாஜக

மும்பை புனே பகுதியில் மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ் சிலை அகற்றப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்பாட்டத்தின்போது புனே நகரத்தில் 8 பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



மேலும் சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள லோனாவாலா ரெயில் நிலையம் சென்று ரெயில்களையும் நிறுத்துமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த சிலநாட்களாக மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சிவசேனா தொண்டர்களிடமிருந்து பொதுசொத்துகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச்சொத்துக்கு சேதம் விளைத்த சிவசேனா கட்சியினர் சிலரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.

 
Source:.inneram

No comments:

Post a Comment