கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் மழை தூறல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்தது.
10 நாள் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. 6ம் தேதிக்கு பிறகு மழை விட்டு வெயில் காயத் துவங்கியதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்து சகஜ நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12 மணி முதல் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை தூறல் இருந்து கொண்டே இருந்தது. கடலூரில் பகல் 2 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சற்று நேரம் கன மழை பெய்தது. பகல் 12 மணி முதல் தொடர்ந்து மழை தூறல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Source:dinamalar
December 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment