கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் மழை தூறல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்தது.
10 நாள் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. 6ம் தேதிக்கு பிறகு மழை விட்டு வெயில் காயத் துவங்கியதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்து சகஜ நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12 மணி முதல் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை தூறல் இருந்து கொண்டே இருந்தது. கடலூரில் பகல் 2 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சற்று நேரம் கன மழை பெய்தது. பகல் 12 மணி முதல் தொடர்ந்து மழை தூறல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Source:dinamalar
December 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் வெற்றி நிலவரம்!
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஜெயிக்கப் போவது யாரு????
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- முஹமது யூனுஸ் & இபாயின் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள்
No comments:
Post a Comment