சிதம்பரம் :சிதம்பரத்தில் மதம் மாறிய பெண் உடலை பள்ளிவாசலில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் மேலவீதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஆஷியா மரியம் (45). (கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மதம் மாறியவர்). உடல் நலம் சரியில்லாமல் இருந்த ஆஷியா மரியம் இறந்தார். அவரின் உடலை லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இதையறிந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆஷியா மரியம் முஸ்லிமாக மாறியவர்,அவர் பிறப்பால் முஸ்லிம் இல்லை எனக்கூறி லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யக்கூடாது என தடுத்தனர். மேலும், அடக்கம் செய்ய வேண்டும் என்றால் லால்கான் தெரு பள்ளிவாசலில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.இதனால் ஆஷியா மரியத்தின் உறவினர்களுக்கும்,பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உடலை அடக்கம் செய்யாமல் அங்கேயே வைத்து விட்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகர இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஆஷியா மரியத்தின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து ஆஷியா மரியம் உடல் லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
source: dinamalar
October 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4 நிமிடத்தில் நடத்திய கைவரிசை ஏடிஎம் மெஷினை திறந்து ஸி21 லட்சம் கொள்ளை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
No comments:
Post a Comment