பரங்கிப்பேட்டை முடசல் ஓடைப் பகுதியில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 10 கோடி செலவில் முகத்துவாரம் அமைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.
முடசல் ஓடைப் பகுதியில் தூர்ந்து போன முகத்துவாரத்தை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கிள்ளை பகுதியில் உலகவங்கி நிதியுதவியுடன் ரூ. 10 கோடி செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளது.
அதுவரை தாற்காலிகமாக ரூ. 30 லட்சம் செலவில் அன்னங்கோவில் முகத்துவாரத்தை 270 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழத்திலும், சின்னவாய்க்காலில் 180 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும், பில்லுமேட்டில் 220 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும் வெட்டி ஆழப்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
Source: Dinamai
October 18, 2010
பரங்கிப்பேட்டை முடசல் ஓடையில் ரூ. 10 கோடியில் முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- செப் 30-ல் விற்பனைக்கு வரும் மகிந்திரா பைக்குகள்!
- சிதம்பரத்தில் 2 வீடுகளில் ரூ 4 லட்சம் நகை, பணம் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
- சீனாவில் சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர்.
- செல்போன் விபத்து அமெரிக்காவில் 16,000 பேர் இறப்பு
No comments:
Post a Comment