பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகளை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் பகுதியில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம் கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகிறது.
இதனால் சாலைகள் பழுதடைந்தும், விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி பஞ்சங்குப்பம் கிராம மக்கள் நேற்று அப்பகுதி பிரமுகர் ராமச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காலை 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து 10.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.November 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- மாவட்ட உரிமையியல் நீதிபதி…
- பரங்கிப்பேட்டையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- கடலூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் RSS தீவிரவாதியிடமிருந்து புதிய தகவல் ...!
- NT பஸ் விபத்து
- ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?
- இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு
- சிதம்பரத்தில் லஞ்சம் பெற்ற VAO கைது
No comments:
Post a Comment