பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகளை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் பகுதியில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம் கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகிறது.
இதனால் சாலைகள் பழுதடைந்தும், விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி பஞ்சங்குப்பம் கிராம மக்கள் நேற்று அப்பகுதி பிரமுகர் ராமச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காலை 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து 10.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.November 24, 2011
பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment