பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகளை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் பகுதியில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம் கிராம சாலை வழியாக கிராவல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகிறது.
இதனால் சாலைகள் பழுதடைந்தும், விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி பஞ்சங்குப்பம் கிராம மக்கள் நேற்று அப்பகுதி பிரமுகர் ராமச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காலை 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து 10.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.November 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்

No comments:
Post a Comment