கடலூர் : கடற்கரையோர ஒன் றிய பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் எதிர் கொள்ளுதல் பற்றிய புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.
பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கடற் கரையோர ஒன்றியங்க ளான கடலூர், குறிஞ்சிப் பாடி, பரங்கிப் பேட்டை, குமராட்சி பகுதிகளில் 26 ஊராட்சிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க அரசு முன் வந்துள்ளது.இதில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேரிடரை எதிர் கொள்ளுதல் மற்றும் தயார்படுத்துதல், 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேரிடர் மற்றும் சுற் றுச்சூழல் மேலாண்மை தகவல் தொகுப்பு நூல், 11 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்கு பேரிடர் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு பற்றிய தொகுப்பு நூல் என 11 ஆயிரத்து 40 புத்தகங்களை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பங்கேற்றனர். இந்த புத்தகங்கள் வள ஆதார மையங்கள் மூலம் இன்று முதல் பள்ளி வாரியாக வினியோகம் செய்யப்படுகிறது.
Source: dinamalar
September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
No comments:
Post a Comment