Islamic Widget

September 21, 2010

சிதம்பரத்தில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

சிதம்பரம் புதிய டிஎஸ்பியாக சிவனேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிதம்பரத்தில் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் அறிவானந்தம், சுப்ரமணியன், சப்&இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், வனஜா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே சிதம்பரத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய மூவேந்தன் தஞ்சை பணியிடை பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.




டிஎஸ்பி சிவனேசன் நிருபர்களிடம் கூறும்போது, சிதம்பரம் உட்கோட்ட பகுதியில் சட்டம்&ஓழுங்கை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சீரமைக்கப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படும். ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள். லாட்டரி, சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் குறைகளை எந்த நேரத்திலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment