கடலூர்: துணை முதல்வர் வருகையையொட்டி கடலூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கடலூரில் இன்று காலை நடக்கும் தி.மு.க., ஒன்றிய செயலா ளர் ஜெயபால் இல்லத் திருமண விழவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் கடலூர் வருகிறார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைநகர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மாலை 5 மணிக்கு சிதம்பரம் கீழ வீதியில் நடக்கும் பொதுக்கூட் டத்தில் பேசுகிறார். இரவு 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து கடலூர் வழியாக புதுச் சேரி சென்று ஓய்வெடுக்கிறார். மறுநாள் 3ம் தேதி காலை விழுப்புரம் செல்கிறார். துணை முதல்வர் வருகையையொட்டி கடலூரில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதில் கடலூர் பஸ் நிலையத் திலிருந்து புதுச்சேரி மற்றும் பண் ருட்டி மார்க்கம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக செம்மண்டலத்திற்கு திருப்பி விடப்படுகிறது.
Source: Dinamalar
September 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment