கடலூர்: போலீஸ் பயிற்சித் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற கடலூர் போலீஸ் பயிற்சி மாணவர் பாபுவை எஸ்.பி., பாராட்டினார். கடலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப் பட்ட 151 பேர் கடந்த ஐந்து மாதங்களாக எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் சட்ட வகுப்புகள், துப்பாக்கிச் சுடுதல், கவாத்து பயிற்சிகள் அளிக் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்வு
நடந்தது. அதில் தமிழகத்தில் 24 போலீஸ் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 825 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் கடலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த 132 மாணவர்கள் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். தேர்வில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட 10 பதக்கங்கள் வெற்றனர். அதில் பாபு முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற பாபு மற்றும் அதிக மதிப்பெண் பெற்றவர்களை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பாராட்டினார். ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். பயிற்சி முடித்த அனைத்து போலீசாரும் அடுத்த ஒரு மாதத் திற்கு போலீஸ் நிலையங்களில் பயிற்சி பெற உள்ளனர்.
Source: Dinamalar
September 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- என்றுதான் ஒழியுமோ? ஆட்சியாளர்களின் மதவெறி!
- நஷ்டவாளர்கள் யார்?
- உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிப்பு
No comments:
Post a Comment