கடலூர்: போலீஸ் பயிற்சித் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற கடலூர் போலீஸ் பயிற்சி மாணவர் பாபுவை எஸ்.பி., பாராட்டினார். கடலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப் பட்ட 151 பேர் கடந்த ஐந்து மாதங்களாக எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் சட்ட வகுப்புகள், துப்பாக்கிச் சுடுதல், கவாத்து பயிற்சிகள் அளிக் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்வு
நடந்தது. அதில் தமிழகத்தில் 24 போலீஸ் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 825 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் கடலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த 132 மாணவர்கள் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். தேர்வில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட 10 பதக்கங்கள் வெற்றனர். அதில் பாபு முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற பாபு மற்றும் அதிக மதிப்பெண் பெற்றவர்களை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பாராட்டினார். ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். பயிற்சி முடித்த அனைத்து போலீசாரும் அடுத்த ஒரு மாதத் திற்கு போலீஸ் நிலையங்களில் பயிற்சி பெற உள்ளனர்.
Source: Dinamalar
September 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., நேர்காணல் மனு செய்த 31 பேரும் ஒரே நேரத்தில் சந்திப்பு
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
No comments:
Post a Comment