Islamic Widget

November 08, 2010

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால்அன்னங்கோயில் பகுதி "வெறிச்'

பரங்கிப்பேட்டை:புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் அன்னங் கோயில் பகுதி வெறிச் சோடி காணப்பட்டது.


வங்கக் கடலில் உருவாகியுள்ள "ஜல்' புயல் காரணமாக கடல் சீற்றம் காணப் பட்டது. அதனால் மீனவர் கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான புதுக்குப்பம், புதுப் பேட்டை, பரங்கிப் பேட்டை, சாமியார் பேட்டை, முடசல் ஓடை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை அன்னங்கோயில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை கடற்கரையோரம் நேற்று பலத்த காற்று வீசியதால் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை பெரும்பாலானவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் பிடித்து வரும் மீன் வகைகளை அன்னங் கோயிலுக்கு கொண்டு வந்து அங்கிருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் எடுத் துச் செல்லப்படும்.கடந்த மூன்று நாட் களாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லாததால் அன்னங்கோயில் பகுதி முழுவதும் வெறிச் சோடி காணப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் மானிய டீசல் பங்க்கும் மூடப்பட்டு இருந்தது.

 
Source: Dinamalar

No comments:

Post a Comment