Islamic Widget

August 08, 2010

கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் தற்போது கிளைநூலகம் பெரியக்கடை தெருவில் உள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் அதிக நூல்களை வைத்து பராமரிக்க முடியாத நிலை மட்டுமின்றி, கட்டிடமும் மிகவும் பழுதடைந்துள்ளது.

மேலும் அதிக வாசகர்கள் உட்காருவதற்கும் இட நெருக்கடியுள்ளது போன்ற விசயங்களை குறிப்பிட்டு, தற்போதுள்ள நூலகத்தை, ஏற்கனவே இதற்காக ஒதுக்கப்ட்டுள்ள பழைய பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உடனே மாற்றக் கோரி, 6-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ். கைருன்னிசா கல்வி துறை அமைச்சருக்கு இசைவு கடிதம் வழங்ககோரி மனு அளித்துள்ளார்.
இம்மனு சம்மந்தப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு இதற்கு இசைவு கடிதமும் உடனே வழங்கப்பட்டுள்ளதாக கைருன்னிசா தெரிவிக்கிறார்.
நன்றி mypno

No comments:

Post a Comment