Islamic Widget

August 09, 2010

கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி

தமிழகம் முழுவதும் வெப்ப சலனக்காற்றோட்டம் காரணமாக கடலோர பகுதியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.


கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி தந்தது. நேற்று இரவு திடீர் என மழை பெய்தது. கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.

பலத்த மழைக்கு இடிதாக்கி ஒருவர் பலியானார். அவரது பெயர் தனசேகரன் (வயது 44). விழுப்புரம் அருகே உள்ள ராம்பாக்கம் பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த இவர் கடலூர் அருகே நல்லாத்தூர் பகுதியில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு நேரத்தில் குடிசை பகுதியில் உட்கார்ந்து இருந்த போது இந்த துயர முடிவு அவருக்கு ஏற்பட்டது.
இந்த மழையால் ஆடிப்பட்ட விசாயிகள் விவசாய பணிகளில் இறங்கி உள்ளனர்

No comments:

Post a Comment