பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தங்கி சிகிச்சையளிக்க டாக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அகரம், புதுப்பேட்டை, சின்னூர், சாமியார் பேட்டை, புதுக்குப்பம், பு.முட்லூர், அரியகோஷ்டி, கிள்ளை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் உள் நோயாளி, வெளி நோயாளி, பிரசவ வார்டுகள், ஸ்கேன், எக்ஸ்ரே என அனைத்து வசதிகளும் உள்ளன.மருத்துவமனையில் நான்கு டாக்டர்களில் ஒரு டாக்டர் மாறுதலில் சென்றதால் தற்போது மருத்துவமனை மருத்துவ அலுவலரை சேர்த்து மூன்று டாக் டர்களே உள்ளனர். இதனால் கடந்த இரண்டு மாதமாக இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை.இரவில் தங்கி சிகிச்சையளிக்க டாக்டரை நியமிக்க கலெக்டர் நடவடிக்க எடுக்க வேண்டும்.
Source: Dinamalar photos pno.news
November 09, 2010
அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு
- இறப்புச் செய்தி
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- இறப்புச் செய்தி
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
No comments:
Post a Comment