கிள்ளை:பிச்சாவரத்தில் படகு சவாரி மூலம், தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை மூலம் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டு துடுப்பு படகுகளுடன், மோட்டார் படகுகள்
இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோடை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தற்போது தீவாளியை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால், நேற்று முன்தினம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் படகு சவாரி மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாயாகும். நேற்று "ஜல்' புயல் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
Source: Dinamalar
November 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- இறப்புச் செய்தி
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
No comments:
Post a Comment