விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகமெங்கும் தற்போது பரவி வருகிற ஆல்ககால் சைக்கோசிஸ் நோய் மனநிலையை பாதிக்கக்கூடிய நோயாகும். 18 வயதுடைய இளைஞர்கள் முதல் குடிபழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளில் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. இளைஞர்கள் பாழாவதற்கு காரணமான டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும். மேலும் தமிழக மக்களுக்கு தமிழக அரசு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஆணை பிறப்பித்தும் இதுவரை மருத்துவ கல்லூரி தொடங்கப்படவில்லை. எனவே உடனடியாக கடலூரில் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட கட்சி செயலாளர் தாமரைச்செல்வன், நிர்வாகிகள் திருமார்பன், கெய்க்வாட்பாபு, முல்லை வேந்தன், ஆதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment