August 14, 2010
கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்
பரங்கிப்பேட்டை,: முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்பதற்காக, மாணவியர் கடும் வெயிலில் காத்திருந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகார்ஜுனா பவுண்டேஷன் சார்பில் நேற்று பரிசு வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டுவதற்காக, மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி அழைக்கப் பட்டிருந்தார்.காலை 10 மணிக்கு வருவதாக இருந்த அவரை வரவேற்க மாணவியர், பள்ளி நுழைவாயிலில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலணி கூட அணியாமல் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சுடுமணலில் நிற்க முடியாமல் மாணவியர் அவதிக்குள்ளாயினர்.ஒரு வழியாக 11 மணிக்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்ற பின், "சீட்'டில் உட் காரச் செல்ல முயன்ற மாணவியரிடம், விழா முடியும் வரை நிற்க வேண் டும் என ஆசிரியர்கள் கட் டளையிட்டனர். மர நிழலில் நின்று ஓய்வெடுத்த பின், மீண்டும் 12 மணிக்கு விழா முடியும் வரை நிற்க முடியாமல் அவதியுடன் மாணவியர் நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment