Islamic Widget

August 10, 2010

புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை



பரங்கிப்பேட்டை: இனி பரங்கிப்பேட்டை பேருந்து நிலைய பகுதியை டாஸ்மாக் கார்னர் என்று அழைக்கலாம். அந்த அளவிற்கு குடிமகன்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பெருகிவரும் குடிமகன்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் புதியதொரு டாஸ்மாக் கிளையை ஏற்கனவே இருக்கும் டாஸ்மாக் வளாகத்திலேயே திறக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் போர்கால வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருக்கும் டாஸ்மாக் பேருந்துநிலையத்தின் பெண்கள் அமரும் இடத்திற்கு மிக அருகில் இருப்பதினால், பெண் பயணியர் அங்கு நிற்க தயங்குகின்றனர். அதுவும் 5 மணிக்கு மேல், பேருந்து நிலையம் ஒரு மினி பார் ரேஞ்சுக்கு மாறிவிடும் அவலம் இருந்துவருகிறது. இந்நிலையில் அதன் அருகிலேயே இன்னொரு டாஸ்மாக் கிளை திறக்கப்ட உள்ளதாகவும், அதன் வேலைகள் ஜரூராக நடப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.இதனை உடனே தடுத்த நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மற்றும் 7-வது வார்டு கவுன்சிலர் பாவாஜான், 8-வது வார்டு கவுன்சிலர் அருள்முருகன், 17-வது வார்டு கவுன்சிலர் நடராஜன் ஆகியோர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலை (09-08-2010) ஒன்று கூடி காவல்துறையிடம் அவசர நடவடிக்கை எடுக்க கோரி மனுக்கள் அளித்துள்ளனர்.
நன்றி mypno

1 comment:

  1. Dear pno's,
    It is happening infront of the police station ,what they did for the old complaints?simply they receive the complaint and they never going to fwd it to the concern dept.better to see the collector."Shout in the right time and in the right place your voice would be clearly observed"not in the unwanted places.

    with regard's
    Abul Hasan.

    ReplyDelete