Islamic Widget

December 29, 2011

தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


தானே புயல் நாளை காலை கரையைக் கடக்க இருப்பதால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வங்ககடலில் மையம் கொண்டுள்ள தானே காற்றலுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோரபகுதிகளில் பலத்த மலை பெய்து வருகிறது.

இந்தக் காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்து நாளை சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்ககோரி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை காலை இந்த புயல் கரையைக் கடக்கும் என்பதால் அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் செயல் பட வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment