Islamic Widget

March 10, 2011

கடலூரில் விஷ வாயு கசிவு ஊராட்சி பள்ளிக்கு விடுமுறை

கடலூர் : கடலூர் சிப்காட் கம்பெனியில் ரசாயன வாயு கசிவு காரணமாக, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு பள்ளி நேற்று மூடப்பட்டது.கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் கம்பெனியில் கடந்த 7ம் தேதி இரவு 10.30 மணிக்கு "ஹைட்ரோ புரோமின் காஸ்' திடீர் கசிவு ஏற்பட்டது. இதனால் குடிகாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு திடீர் மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
 பாதிக்கப்பட்ட 83 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலர் கிராமத்தை விட்டே வெளியேறினர். இதனால் குடிகாடு கிராமம் வெறிச்சோடியது.இதன் காரணமாக குடிகாடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வராததால் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.


Source: dinamalar

No comments:

Post a Comment