கடலூர் : சிதம்பரம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதை தடுக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிறப்பு படை சப் இன்ஸ்பெக்டர் அமீர்ஜான், ஏட்டுகள் நடராஜன், ரவி, சக்திவேல் உள்ளிட்ட பிரிவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் காடுவெட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் செல்வமணி (24) எனவும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது எனவும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் சிதம்பரத்தில் இரண்டு, திருச்சி அடுத்த லால்குடியில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவிலில் ஒன்று என ஐந்து மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தெரிவித்தார். மேலும் இவர் மீது மீன் சுருட்டி அருகே பஸ் எரித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. உடன் சிறப்புப் படை போலீசார் செல்வமணியை சிதம்பரம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஐந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
source: dinamalar
January 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment