சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்களை நிறுத்துவதாக கூறி போலீசார் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து தனியார் பஸ்களை எடுக்காமல் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்களை முறையாக கட்டைகளில் நிறுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவது குறித்து வழக்குப் பதிய டி.எஸ்.பி., மோகன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் கடந்த இரண்டு நாட்களாக பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பஸ்கள் மீது வழக்குப் பதிந்தனர்.
ஆத்திரமடைந்த தனியார் பஸ் ஊழியர்கள், அரசு பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. நாள் ஒன்றுக்கு 390 பஸ்கள் வருகிறது. இதில் 80 பஸ்கள் மட்டுமே தனியார் பஸ்கள். அணைக்கரை பாலம் பழுதடைந்ததால் கூடுதலாக 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வருகிறது. இதனால்தான் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஆனால் தனியார் பஸ்களால் மட்டுமே இடையூறு ஏற்படுவதாக வழக்கு போடுவது நியாயமில்லை எனக் கூறி மோட்டார் தொழிலாளர் சங்க செயலர் அன்பழகன் தலைமையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர் பஸ்களை எடுக்காமல் பஸ் நிலையத்திலேயே நிறுத்தி விட்டதால் பஸ் நிலையம் நோக்கி வந்த அனைத்து பஸ்களும் நகரம் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கண்ணபிரான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக தீர்வு ஏற்பட்டதையொட்டி 11 மணிக்கு துவங்கிய ஸ்டிரைக் 11.40க்கு கைவிடப்பட்டது.
source: dinamalar
January 14, 2011
போலீசை கண்டித்து தனியார் பஸ் ஸ்டிரைக் சிதம்பரத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment