கொல்லம், அக்.1: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யும்போது கர்நாடக போலீசார் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து மதானி உறவினர் அப்துல் சலாம் தாக்கல் செய்த மனுவை கொல்லம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் செளந்தரேஷ் தள்ளுபடி செய்தார்.
கேரளத்தில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டுசெல்லப்படும் முன் உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் மதானியைக் கைது செய்து 24 மணி நேரத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது என கர்நாடக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்று மதானி உறவினர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு இராமகோபாலன் வேண்டுகோள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- மய்யத் செய்தி
- சிப்காட் கெமிக்கல் கம்பெனிக்கு சீல்மேலாளர் மீது வழக்குப் பதிவு
No comments:
Post a Comment