கொல்லம், அக்.1: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யும்போது கர்நாடக போலீசார் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து மதானி உறவினர் அப்துல் சலாம் தாக்கல் செய்த மனுவை கொல்லம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் செளந்தரேஷ் தள்ளுபடி செய்தார்.
கேரளத்தில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டுசெல்லப்படும் முன் உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் மதானியைக் கைது செய்து 24 மணி நேரத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது என கர்நாடக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்று மதானி உறவினர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment