சிதம்பரம், செப்.16: சிதம்பரம் நகர மேம்பாட்டுக்காக அறிவித்த திட்டங்கள் காற்றில் பறந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாலங்கள் திறப்பு விழாவில், "சிதம்பரம் நகர மேம்பாட்டுத் திட்டங்கள் - காற்றில் பறக்கவிடப்பட்ட ஆட்சியரின் அறிவிப்பு' என தினமணியில் வந்த செய்திக்கு பதில் அளித்து அவர் பேசியது: சிதம்பரம் நகரை சுற்றுலா நகரமாக மாற்றுவதற்கும் போக்குவரத்து இடையூறின்றி மக்கள் நடமாடுவதற்கு 4 வீதிகளில் நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் 343 லட்சம் செலவில் 4 வீதிகளின் சாலையை அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களில் வீதிகளை அகலப்படுத்தும் பணி தொடங்கும்.
இத் திட்டங்கள் காற்றில் பறந்துவிடும் என்ற அச்சம் வேண்டாம். ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 18 லட்சம் செலவில் மின்விளக்குகள் அமைக்க கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு தற்போது டெண்டர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மின்விளக்குகள் அமைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment