Islamic Widget

September 19, 2010

கிள்ளையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - கடைகள், கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டது

கிள்ளையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைகள், கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.




தமிழகத்தில் சாலைகளை அகலப்படுத்தவும், விபத்தை தடுக்கவும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.



அதேபோல் கிள்ளை கடை வீதி பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிலர் தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அதிரடியாக அகற்றம் செய்தனர்.



கிள்ளை-பொன்னந்திட்டு சாலையில் உள்ள கடைகள், கட்டிடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் சாலையோரத்தில் இருந்த கூரை வீடுகளை அதிகாரிகள் அகற்ற சென்றனர்.



அவர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் கற்பனை செல்வம் ஆகியோர் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாற்று இடம் இன்றி, பட்டா இன்றி சாலையோரத்தில் தங்கி இருக்கும் கூரை வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கும் வரை அதனை அகற்ற வேண்டாம் என்று கூறினர். அதன்படி அதிகாரிகள் கூரை வீடுகளை மட்டும் விட்டு விட்டு மீதியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.



ஆக்கிரமிப்பின் போது பிரச்சினைகள் ஏதும் நடக்காமல் தடுக்க கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.



Source: Daily Thanthi

No comments:

Post a Comment