கடலூர்: கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் வழி நேற்று முதல் மாற்றப் பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே செல்லும் ஜி.ஆர்.கே. காம்ப்ளக்ஸ் சாலை குறுகலாக இருந்ததாலும், இதே வழியில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சென்று வருவதாலும் பஸ்கள் வெளியேறுவதில் சிரமம் இருந்தது. மேலும், மெயின் ரோட் டில் பஸ் திரும்பும் போது அடிக் கடி சிறுசிறு விபத்துகளும் ஏற்பட்டன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு போலீசார் போக்குவ ரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தனர். அதன்படி புதுச்சேரி மற்றும் பண்ருட்டி செல்லும் பஸ்கள் நேற்று காலை முதல் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக திருப்பி விட்டனர். இதன் காரணமாக ஜி.ஆர்.கே. காம்ப்ளக்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
இருப்பினும் இந்த சாலையின் இரு பகுதியிலும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும், அதே பகுதியில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனை தவிர்த்திட, இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.
மேலும், சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கங்களில் இருந்து வரும் பஸ்களை ரயில்வே மேம்பாலம் வழியாக நேரடியாக பஸ் நிலையம் செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
September 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment