September 16, 2010
பிளஸ் 2 தனித் தேர்வு ஆயத்தக் கூட்டம்
கடலூர்: பிளஸ் 2 தனித் தேர்விற்கான ஆயத்தக் கூட்டம் நடந்தது. பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் பர்வதராஜகுலம் மேல்நிலைப் பள்ளி, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளிகளில் நடக்கிறது. தேர்வை முறையாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கடலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந் தது. சி.இ.ஓ., அமுதவல்லி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பூங்கொடி, பத்ரூ, முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப் பாளர்கள் மற்றும் பறக்கும் படையினர் பங்கேற்றனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment