September 16, 2010
பிளஸ் 2 தனித் தேர்வு ஆயத்தக் கூட்டம்
கடலூர்: பிளஸ் 2 தனித் தேர்விற்கான ஆயத்தக் கூட்டம் நடந்தது. பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் பர்வதராஜகுலம் மேல்நிலைப் பள்ளி, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளிகளில் நடக்கிறது. தேர்வை முறையாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கடலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந் தது. சி.இ.ஓ., அமுதவல்லி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பூங்கொடி, பத்ரூ, முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப் பாளர்கள் மற்றும் பறக்கும் படையினர் பங்கேற்றனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
No comments:
Post a Comment