பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் பழைய ரயில்வே பாலம் கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அகல ரயில் பாதைக்காக பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலத்தின் பக்கத்தில் உள்ள பழைய ரயில்வே கருடரை அப்புறப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள்...
துவங்கியது. 600 அடி நீளம் உள்ள கருடரை ஒரு மாதத்திற்கும் மேல் அப்புறப்படுத்தும் பணி நடந்தும் 100 அடி அளவிற்கு மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் கருடரை அப்புறப்படுத்தாததால் ரயில்வே துறை சார்பில் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டருக்கு அபராதம் விதித்தது. இதனால் கடந்த 5 மாதமாக கருடரை அப்புறப்படுத்தும் பணி நடக்காமல் உள்ளது. தற்போது 20 அடி நீளத்திற்கு கருடர் புதிய பாலத்தின் மீது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பழைய ரயில்வே கருடரை அப்புறப்படுத்த ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
October 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment