பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் பழைய ரயில்வே பாலம் கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அகல ரயில் பாதைக்காக பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலத்தின் பக்கத்தில் உள்ள பழைய ரயில்வே கருடரை அப்புறப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள்...
துவங்கியது. 600 அடி நீளம் உள்ள கருடரை ஒரு மாதத்திற்கும் மேல் அப்புறப்படுத்தும் பணி நடந்தும் 100 அடி அளவிற்கு மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் கருடரை அப்புறப்படுத்தாததால் ரயில்வே துறை சார்பில் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டருக்கு அபராதம் விதித்தது. இதனால் கடந்த 5 மாதமாக கருடரை அப்புறப்படுத்தும் பணி நடக்காமல் உள்ளது. தற்போது 20 அடி நீளத்திற்கு கருடர் புதிய பாலத்தின் மீது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பழைய ரயில்வே கருடரை அப்புறப்படுத்த ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
October 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment