Islamic Widget

September 01, 2010

பரங்கிப்பேட்டை அருகே பிறந்த பெண் குழந்தைக்கு; ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்க் கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறப்பு சான்றிதழை சேர்மன் முத்துபெருமாள் வழங்கினார். நிகழ்ச்சியில் பு.முட் லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அமுதா டாக்டர் பிரேமா பகுதி சுகாதார செவிலியர் சுந்தரி சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source: Dinamalar

No comments:

Post a Comment